இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் போது பெரும்பாலான நாடுகள் உணவு உற்பத்தி மற்றும் உணவில் சுயதேவைப் பூர்த்தி போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்நிலைமையை மிகத் தெளிவாக அவதானிக்க முடிந்தது உலகமயமாக்கல் மற்றும் பிராந்தியமயமாக்கல் என்பவற்றைக் கொண்டகருதுகோளின்கீழ்சுய தேவைப் பூர்த்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன இக்கருதுகோள் தனி ஒரு உலகளாவிய நகரமாக உலகை உருவாக்குகின்றது எனினும் ஒரு நாட்டுக்குள் உற்பத்தி செய்வது ஒப்பீட்டு ரீதியில் பிரதிகூலமானதாக இருந்து வருவதாகக் கருதப்படும் பண்டங்களை இறக்குமதி செய்வது விவேக பூர்வமானதெனக் கருதப்பட்டது.இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கீழ் உலக உணவுப் பாதுகாப்பு என்ற விடயத்தின் இயல்பினையும் ஒரு வளர்முக நாடு என்ற முறையில் இது இலங்கைக்கு எந்த அளவில் பொருந்துகின்றது என்பதனையும் பரிசீலனை செய்வதற்கு இப்பொழுது தருணம் வந்துள்ளது.
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.