தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Sonntag, 31. Juli 2011

உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?

எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களினாலும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான உணவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை என உணவுப் பாதுகாப்புக்கு வரை விலக்கணம் வழங்கப்பட்டுள்ளது.உலக உணவு உற்பத்தியில் கணிசமான அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டு வந்திருந்த போதிலும் கடந்த தசாப்தத்தின் போது பல வளர்முக நாடுகளில் பட்டினியாலும் போசாக்கு இன்மையாலும் அல்லல்படும் மக்களின் அளவு அதிகரித்து வந்துள்ளது என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.1974 இல் உணவு சம்பந்தமாக நடைபெற்ற உலக மாநாட்டில் ஒரு தசாப்த காலத்தில் பட்டினியை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது.ஐக்கிய நாடுகளின் உணவுக்கான உச்சி மாநாடுகளில் ஒன்று 1996 ஆம் ஆண்டிலும் அடுத்த மாநாடு 2002 இலும் நடைபெற்றது.இவ் இரண்டு மாநாட்டிலும் சர்வதேச சமூகம் பட்டினியைக் குறைத்து சத்துணவு இன்மையையும் அகற்றுவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் மூன்று ஐக்கிய நாட்டு மாநாடுகளிலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் பலன் தரவில்லை. இறுதி இரண்டு உச்சி மாநாடுகளிலும் உலகத் தலைவர்களே இவ்வுத்தரவாதங்களை வழங்கினர்.150 நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது உலக உச்சி மாநாடு 12.06.2008 அன்று நடைபெற்றது. தற்போது 30 நாடுகளில் உணவு சம்பந்தமான கிளர்ச்சிகள் வெடித்துள்ளன.60 இற்கு மேற்பட்ட நாடுகளில் அரிசி தானியப் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்த நெருக்கடியைக் கையாள அவசரமானதும், ஒருங்கமைக்கப்பட்டதுமான நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி.மூன், ரோமாபுரி உச்சி மாநாட்டில் உணவுப் பற்றாக்குறையைப் பற்றிக் கூறும்போது 'சுவைபீறியாவில் அண்மைக்காலத்தில் அரிசியை மூடைக்கணக்கில் வாங்கிய மக்கள் இப்போது கிண்ண அளவில் வாங்குபவர்களை நான் சந்தித்து உள்ளேன் என கூறினார்.பசி, பட்டினியால் வருந்துபவர்களுக்கு உதவும் ஐ.நா ஏஜென்சியின் நிர்வாகப் பணிப்பாளர் 'ஜோரெற்ஷிறான்" நாங்கள் துரிதகதியில் செயற்படாதவிடத்து உலகின் 100 கோடி வறிய மக்கள் இருநூறு கோடிகளாக அதிகரிப்பர். ஏனெனில் அவர்களுக்குப் பொருட்களை வாங்கும் பணத்தகுதி உணவு, எரிபொருட்களின் விலை இரட்டிப்பானதால் அரைவாசியாகக் குறைந்துள்ளது எனக்கூறினார்.உரோமாபுரியைத் தளமாகக்கொண்ட உணவு விவசாய நிறுவன த்தின் அனுசரணையில் மூன்று நாட்களாக நடைபெற்ற உச்சி மாநாடு பிரகடனப் படுத்துவதாவது, உலகளாவிய ரீதியில் பட்டினிக்கும், போசாக்கின் மைக்கும் எதிராகப் போராடும் பயபக்தியான பிரகடனமாகும். ஆனால் இப்பிரகடனம் பலன் தருமா? என்பதே அனைவரினது எதிர்பார்ப்பாகும்.போதியளவிலான உணவு விநியோகம் ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பை வழங்கி வந்தபோதிலும் அது குடும்ப உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதில்லை. கிடைக்கக்கூடியதாக இருக்கும் உணவு அது தேவைப்படும் மக்களை சென்றடைய வேண்டும். இது போதியளவிலான உற்பத்தி மற்றும் நிலையான விநியோகம் என்பவற்றின் மீதே தங்கியுள்ளது.மறுபுறத்தில் உணவுப் பகிர்வு மக்கள் உணவை பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் நிலையை உறுதிப்படுத்தல் வேண்டும்.உலகில் தாராளமாக உணவு இருந்து வருகின்றது. 1950 தொடக்கம் உலக உணவு உற்பத்தி குடித்தொகையின் வளர்ச்சியிலும் பார்க்க வேகமாக வளர்ச்சி யடைந்து வந்துள்ளது. வறிய மக்கள் போதியளவிலான வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்குமேயானால் உலக உணவு உற்பத்தி இதைவிடவும் துரித வேகத்தில் அதிகரித்திருக்க முடியும்.இத் தகைய சாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட மனித குலத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் பட்டினியால் துன்புற்று வருகின்றனர்.அனைத்து நாடுகளிலும் குடித்தொகை அதிகரித்து வருவதுடன் இணைந்த விகிதத்தில் உணவுக்கான கேள்வியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது.உலகிலே வேகமாக அழிந்துவரும் விடயங்களில் ஒன்று விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை மக்கள் விவசாய நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கான காரணத்தைக் கண்டறிந்து விவசாய நடவடிக்கையில் மக்களை ஈடுபட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.